Sunday, November 17, 2013

திருவிளக்கு பூஜை விதிமுறைகள்

திருவிளக்கு பூஜை இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
திருவிளக்கு பூஜை விதிமுறைகள் :
* விளக்குகளை நன்றாகக் கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்க வேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.
* ஏற்றிய பின்பு அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்....
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ள வேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும் போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணை விளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது

No comments:

Post a Comment